
சரத் பொன்சேகா தமக்கு கிடைத்ததை வைத்து திருப்தி அடையும் மனநிலைக் கொண்டவர் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமக்கு ஏற்பட்டுள்ள அதிகார பசியின் காரணமாகவே அவர் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அவருக்கு அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்கியதுடன், சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான காணியினையும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவற்றைக் கொண்டு சரத் பொன்சேகா திருபத்தி அடையவில்லை என கோத்தாபய தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது குடும்பம் பணத்துக்கு பின்னால் செல்வதாக சரத் பொன்சேகா போலியாக குற்றம் சுமத்தி வருவதாகவும், தமது குடும்பம் அவ்வாறு செல்லவில்லை எனவும், மக்களின நன்மதிப்பை பெறுவதையே தமது குடும்பம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’