வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 நவம்பர், 2009

யாழ் குடாநாட்டிலிருந்து இ.போ.ச. பேரூந்துகள் கொழும்பிற்கு பயணம்!

யாழ் குடாநாட்டில் இருந்து ஏ-9 தரைப்பாதையூடாக இ.போ.ச. பேரூந்துகளில் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (11) ஆரம்பித்து வைத்தார்.

யாழ் காமினி மகா வித்தியாலய மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இப்பயணிகள் போக்குவரத்து சேவையானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தொடர் முயற்சியின் பயனாக மேற்கொள்ளப்பட்டதாகும்.

இதே நேரம் இப்போக்குவரத்து சேவையினூடாக பயணிக்கும் பயணிகள் முறிகண்டி பிள்ளையார் கோவில் தரித்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடவும் இதர இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய தின நிகழ்வில் யாழ் அரச அதிபர் இ.போ.ச. யாழ் பிராந்திய முகாமையாளர் பாதுகாப்புத் தரப்பு உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’