வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 நவம்பர், 2009

அனுராதபுர துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்


அனுராதபுரம் தஹய்யாகம சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக அனுராதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக இரண்டு தரப்பினரிடையே நிலவி வந்த முறுகல் நிலைமையை அடுத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் , அவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’