வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 22 நவம்பர், 2009

கிரிமிச்சையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி


மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள கிரிமிச்சை கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு காட்டு யானை தாக்கியதில் 55 வயது விவசாயியான சோமசுந்தரம் குமாரசாமி என்பவர் பலியாகியுள்ளார்.சம்பத்தில் மேலும் இரு விவசாயிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விவசாயிகள் தமது வயல்களில் இரவு நேர காவல் கடமைக்காக தங்கியிருந்த போது வயலுக்குள் நுழைந்த யானைகள் 7 காவல் குடிசைகளை சேதமாக்கியதோடு விவசாயிகளையும் தாக்கியுள்ளது.

என்றுமில்லாதவாறு காட்டு யானைகளின் தொல்லை தற்போது அதிகரித்து வருவதால் தமது விவசாயச் செய்கை கூட அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’