வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 நவம்பர், 2009

பம்பலப்பிட்டிக் கடலில் இளைஞர் கொலை : நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்


- பம்பலப்பிட்டிக் கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொலிஸாருக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் குற்றமிழைத்த பொலிஸாருக்குத் தகுந்த தண்டனை வழங்குமாறும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், "பம்பலப்பிட்டிக் கடலில் இடம்பெற்ற இந்தப் படுபாதகமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதற்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும்" என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் கோட்டை ரயில் நிலையம் முன்பாக சுமார் இரண்டு மணிநேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’