
புத்தளம் பாலாவியா பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மூவர் அங்கிருந்த 11 வயது சிறுமியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு புகுந்த அம்மூவரும் சிறுமியின் தகப்பனாரையும், அம்மம்மாவையும் கட்டிப்போட்டுவிட்டு இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர். சிறுமியில் கூக்குரலையடுத்து அந்த வீட்டைச் சுற்றிவளைத்த அக்கம்பக்கத்தினரால் இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபர் தப்பியோடிவிட்டார்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இரவு முழுவதும் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலையில் புத்தளம் போலீசார் அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகளைத் தாம் ஆரம்பித்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளது. சிறுமியின் தாயார் வெளிநாடு ஒன்றில் உள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’