வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 அக்டோபர், 2009

அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது


- வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும்இன்று மாலை விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு குறித்த இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக் குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’