வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் ஸோன் 3 முகாமில் மாத்திரம் 2000 பேர் விசேட தேவைக்குட்பட்டோராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இது அறிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தச் சூழ்நிலையில் காயமடைந்து அங்கங்களை இழந்தவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், வாய்பேச முடியாமலும், காது கேளாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும் இயற்கையிலேயே வலது குறைந்தவர்கள் போன்றோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாகத் தெரிகின்றது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தது மட்டுமன்றி, நேரடி தாக்கங்களுக்கு உள்ளாகி உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளுக்காகவே இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’