வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 அக்டோபர், 2009

ஐநா பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் :நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் இம்மாதக் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என பாதுகாப்புப் பேரவையின் தலைவர் லீ லொங் மின் தெரிவித்துள்ளார்.

இலங்கை, மியன்மார் மற்றும் ஹொண்டுராஸ் விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை நிகழ்ச்சி நிரல் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’