வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 அக்டோபர், 2009

நாட்டைவிட்டு வெளியேறுகிறார் நிஷாந்த முத்துஹெட்டிகம


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தென்மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நிஷாந்த முத்துஹெட்டிகம நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளார் என சற்று முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அங்கிருந்து அவர் கருத்து தெரிவித்த போது,

நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருப்பினும் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்து விட்டேன். சுதந்திரமாக வாழ்வதற்காகவே நான் நாட்டை விட்டு வெளியேறுகின்றேன். இது வரை வாழ்ந்த அரசியல் வாழ்க்கை போதும்" என்று தெரிவித்தார்.

இவர் லண்டன் செல்கிறார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’