யாழ் மிருசுவில் நலன்புரி நிலையத்திலிருந்து 221 குடும்பங்களைச் சேர்ந்த 664 பேர் இன்றைய தினம் (29) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அம்மக்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்படி வைபவத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமானதாக ஆக்கிக் கொள்வதற்கு உரிய வகையில் தங்களது வாழ்க்கையை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அம்மக்களைக் கேட்டுக் கொண்டதுடன் எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு இடம்கொடுக்காமல் நிம்மதியானதும் சுதந்திரமானதுமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஓரணி திரண்டு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சொந்த இருப்பிடங்களுக்குச் செல்லும் இம்மக்களுக்கு அமைச்சர் அவர்கள் உதவித் தொகைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’