வி ஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமைகொண்ட இலங்கையர்களை ஐக்கிய இராச்சியத்தில் வேலைசெய்ய அழைப்பதாக ஐக்கிய இராச்சிய அரசாங்கம் கூறுகின்றது.
இலங்கையிலும் மாலைத்தீவிலும், விஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் திறமையான சில மேதாவிகள் உள்ளனர். இவர்கள் 'மேதாவிலாச திறமையாளர் குடிவரவு பாதை' என்னும் விசேட ஏற்பாடு வழியாக ஐக்கிய இராச்சியத்தில் வேலை செய்யும் சாத்தியத்தை ஆராய்ந்து பார்க்கும்படி நான் விதந்துரைக்கின்றேன் என இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் கூறியதாக கொழும்பிலுள்ள பிரத்தானிய உயர்ஸ்தானிகரலயம்; கூறியுள்ளது.
-













