பங்களாதேஷ் இராணுவ தூதுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய இக்குழு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.













