வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கண்ணிவெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணிவெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புதிய தொழில்நுட்பங்களுடன் புலிகளால் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள்

வி டுதலைப் புலிகளால் புதிய தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கோணாவில் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

சனி, 31 அக்டோபர், 2009

உறுகாமம் வெடிப்புச் சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய உறுகாமம் பகுதியில், வெட்டைவெளியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தனர்.

புலிகள் புதைத்து வைத்திருந்த பாரிய குண்டு ஒன்றை எடுத்து இவர்கள் விளையாடிய போதே அக்குண்டு வெடித்ததில் இவர்கள் பாரிய காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டில் கல்வி பயிலும் செல்வராசா சிவசங்கர் (10 வயது) 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் செல்வராசா நிரோசன்(12 வயது) ஆகிய இரு சகோதரர்களே படுகாயம் அடைந்தவர்களாவர்.

கூலித் தொழில் புரியும் 42 வயதுடைய நாகலிங்கம் செல்வராசாவின் புதல்வர்களான இருவரும் விளையாடிக்கொண்டிருந்த போது பாரிய சத்தத்துடன குண்டு வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

வியாழன், 1 அக்டோபர், 2009

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு ஐநா உதவி


வடபகுதியில் கண்ணிவெடி அப்புறப்படுத்தும் பணிகளுக்கு 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் அந்தோனியோ கெட்டஸுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும், ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது.

ஜெனீவாவில் நடைபெறும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டுள்ளார்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்கள் குரேஷியாவிலிருந்து இறக்குமதி


வடபகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான நிலக்கண்ணி வெடிகளை துரிதகெதியில் அகற்றும் நோக்கில் ஐந்து இயந்திரங்கள் குரேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலக்கண்ணி வெடி அகற்றும் இந்தக் கருவிகளைத் தருவிப்பதற்காக சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், செக்கோஸ்லோவாக்கியாவிடமிருந்தும் இவ்வாறான கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கருவிகளைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் சதுர மீற்றர் பரப்பில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகை இயந்திரங்களைத் தூர இருந்து கொண்டு இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது