வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 ஜனவரி, 2013

அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகம் கரிசனை


ண்மை காலமாக இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய சிவில் சமூக நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் சட்டத்திற்காக குரல்கொடுப்போருக்கு எதிராக தொடர்ந்தும் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது உலகளாவிய உரித்துடையதென்பதுடன் அது இலங்கை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் பழிவாங்குதலுக்கு உட்படும் அச்சமேதுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகின்றோம்". -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’