வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜனவரி, 2013

பல்கலை, பாடசாலை அனுமதிக்கான வயதை குறைக்க தீர்மானம்: எஸ்.பி


ல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வி முறைகளின் வயதெல்லையினை மாற்றியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் பல்கலைக்க அனுமதி வயதை 20 இருந்து 16 ஆகவும் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வயது நான்காக குறைக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். ஏனைய நாடுகளிலுள்ள்வி முறையை போன்று மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறையினால் மாணவரொருவர் தரம் 10 இல் கல்வி பயிலும் போதே க.பொ.த (சா/த) பரீட்சைக்கும் தரம் 12 இல் கல்வி பயிலும் போதே க.பொ.த (உ/த) பரீட்சை தோற்றுவார்கள் என அவர் கூறினார். அண்மையில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் இந்த மாற்றத்தினை பல்கலைக்கழக உப வேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாடசாலை அனுமதி வயது நான்காக மாற்றியனால் 7 முதல்; 10 வரையான தரத்தில் ஒன்றை குறைக்கலாம் . இதனால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் 16 வயதில் நுழைந்து ஆகக்கூடியது 21ஆவது வயதில் பட்டம் பெற்று வெளியேறலாம். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’