யா ழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக மாதகல் பிரதேசம் அமைந்துள்ள யம்புகோளப்பட்டினம் விளங்குகின்றது
இலங்கைக்கு முதற்தடவையாக சங்கமித்தை வெள்ளரசு மரத்தினைக்கொண்டு வந்த இடத்தினை நினைவுகூரும் விதத்தில் அங்கு நினைவுச்சின்னம் ஒன்றும் விகாரை ஒன்றும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் எங்கு செல்லாவிட்டாலும் அங்கு சென்று பார்வையிடுவதுடன் அருகில் உள்ள பௌத்த விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள் தோறும் இந்த இடத்திற்கு பல நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் இது ஒரு புனிதமான பிரதேசமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றது.





0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’