வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 செப்டம்பர், 2012

படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 86 பேர் கைது



டகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 86 பேரை சிலாபம் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இதன்மூலம், இவ்வருடம் கைது செய்யப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை செனேஷா துவ எனும் படகில் பயணம் செய்த 58 தமிழர்கள், 9 சிங்களவர்கள் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டனர். செலோனி துவ எனும் படகிலிருந்து 14 தமிர்கள் 5 சிங்களவர்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். சிலாபம் கரையோரத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் இவர்களின் படகுகள் வழிமறிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மன்னார், நீர்கொழும்பு, ஆனமடுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’