வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சிறுமி வல்லுறவு; படைவீரர் கைது


13 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :– பதின் மூன்று வயதுடைய மாணவி ஒருவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரைக் கைது செய்த கல்கிரியாகம பொலிஸார் அவரை கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ௭டுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடு த்தே குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’