வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜூன், 2012

தமிழினிக்கு புனர்வாழ்வளிக்க உத்தரவு



மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்கு தமிழினி விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழினியை புனர்வாழ்வுக்கு உட்படுத்த தமக்கு ஆட்சேபனம் இல்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மூன்றரை வருடங்களான தமிழினியின் விருப்பத்தின் பேரிலேயே அவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், தொடர்ந்தும் புனர்வாழ்வளிக்க அவரது விருப்பத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’