வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 மே, 2012

காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ சண்முகரட்ண சர்மா அவர்களது பூதவுடலுக்கு அமைச்சர் இறுதி அஞ்சலி!

காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ சண்முகரட்ண சர்மா அவர்களது பூதவுடலுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு பொறளை இந்துமயானத்தில் இன்றைய தினம் (20) இடம்பெற்ற இறுதி நிகழ்வில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மருதானையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கப்பித்தாவத்தை சிறீ பாலசெல்வ விநாயகர் தேவஸ்தான பிரதம குருவாகவும் இருந்துள்ளார். தனது 97 வது வயதில் நேற்றைய தினம் காலமான அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் பொறளை இந்துமயானத்தில் நடைபெற்றன.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’