வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மே, 2012

பொன்சேகா விடுதலை செய்யப்படுவதன் பெருமை அனைவருக்கும் உரியது: அர்ஜுன



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்படுவதற்கான பெருமையானது இலங்கை மக்களுக்கும் அவருக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகத்திற்கும் செல்ல வேண்டும் என சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான மக்கள் இயக்கத்தின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கீழ் மட்ட மக்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அங்கத்தவர்கள் உட்பட பலரும் பகிரங்கமாக ஆதரவளிக்க முடியாத போதிலும் பொன்சேகாவின் விடுதலையை ஆதரித்ததாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 'அவரை விடுதலை செய்வதில் அதிக எண்ணிக்கையான மக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே இதற்கான பெருமை எந்தவொரு தனி நபருக்கோஅல்லது எமது இயக்கத்திற்கோ மாத்திரம் உரியதல்ல' என அர்ஜுன கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’