வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ரொபட் ஓ பிளேக்குடன் அமெரிக்க அதிகாரிகள் பலர் இலங்கை விஜயம்


தெ ற்காசிய பிராந்தியங்களுக்கான வெளிவிவகார அமைச்ச ரொபட் ஓ பிளேக் மற்றும் அமெரிக்காவின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலாளர் மரி ஒட்டே ஆகியோர் உட்பட அமெரிக்க உயர் அதிகாரிகள் பலர் நேற்றிரவே இலங்கை வந்துள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள் உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்க உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயமானது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’