வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் முச்சக்கர வாகன சாரதிக்கு மரண தண்டனை


ஹெ ரோயின் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக முச்சக்கர வாகன சாரதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்த பெல்லகமகே ரலலகே சுனில் கருணாரட்ன பண்டார எனும் இந்நபர் 23.09.2007 ஆம் திகதி 6.58 கிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றத்திற்காக அவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன நேற்று திங்கட்கிழமை மரண தண்டனை விதித்தார். குற்றம்சுமத்தப்பட்ட நபர் பௌத்தாலோக மாவத்தையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு அருகிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்திய சோதனையின்போது காற்சட்டைப் பையில் ஹெரோயின் பார்சலொன்றை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வேளையில் வாகனத்தில் இருந்த பயணியொருவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’