வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிறுமியை கடத்தியவரின் அந்தரங்க உறுப்பில் செங்கல்லை கட்டிவைத்து தண்டணை

சிறுமி ஒருவரை கடத்தியதுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த நபரொருவருக்குத் தண்டனையாக கிராம மக்கள் அந்நபரை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க உறுப்பில் செங்கல்லை கட்டி ஊர்வலமாக நடக்கவைத்த சம்பவமொன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.


பங்களாதேஷின் தென் பிராந்தியமான, டாக்காவிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிராமமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30 வயதான மேற்படி நபருக்கு கடந்த சனிக்கிழமை உள்ளூர் நிர்வாக சபையொன்று இத்தண்டனையை வழங்கியுள்ளது.
இந்நபர் 12 வயதான சிறுமியொருத்தியை கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்துள்ளார். பின்னர் அச்சிறுமி அவரின் பிடியிலிருந்து தப்பிச் சென்று இது தொடர்பாக மக்களிடம் புகார் செய்தாள்.
அதையடுத்து கிராம சபையின் தலைவரும் கிராம பெரியவர்கள் பலரும் சேர்ந்து குறித்த நபரை தாக்கியுள்ளதுடன் அவரை நிர்வாணமாக்கி அவரது ஆணுறுப்பில் செங்கல்லை கட்டிவிட்டு, வீதியில் நடக்கச்செய்தனர். இதை சுமார் 200 பேர் பார்த்துக்கொண்டிருந்ததாக உப பொலிஸ் பரிசோதகர் பினோய் கிருஷ்ணா கார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பங்களாதேஷ் பெரிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’