வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 ஜூலை, 2011

பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 30 மாத சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இவருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை, மன்னிப்பு அல்லது சலுகை வழங்கும் வகைக்குள் அடங்கவில்லை என அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க கூறினார்.
சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை கடந்த வருடம் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன்படி இவர் ஏப்ரல் 30, 2013 இல் விடுதலை செய்யப்படுவார் என அவர் கூறினார்.
இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட இவருக்கு மன்னிப்பு வழங்கும் சட்ட ஏற்பாடுகள் இல்லை என திஸாநாயக்கா கூறினார்.
தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் பொன்சேகா தடுப்புக்காவலில் இருந்தக் காலம் இந்த 30 மாத தண்டனையுடன் சேர்க்கப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’