வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஜூலை, 2011

கிளிநொச்சியில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலரால் மரண அச்சுறுத்தல்

கிளிநொச்சி மாவட்டம் வட்டகச்சி பகுதியிலுள்ள வர்த்தகருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்க வேண்டாம் என வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளதுடன் அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டகச்சியில் பண்ணையொன்றின் முகாமையாளராகக் கடமையாற்றும் தர்மசிறி என்ற வர்த்தகரே இந்த முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.
வேன் ஒன்றில் அவரது வீட்டுக்கு வந்த கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பண்ணையையும் சேதமாக்கியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு குறிப்பிடுகிறது.
இதேவேளை, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’