வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 பிப்ரவரி, 2011

தமிழகத்தில் எல்.ரி.ரி.ஈ. இல்லை: தமிழக பொலிஸார்

மிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள் எவரும் இல்லை என தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் திருச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழக சட்டசபைத் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு நிலைமைகள் மற்றும் தேர்தலின்போது எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகள், அவற்றை எதிர்கொள்வதற்கு அவசியமான விடயங்கள் போன்றவை குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கோரியுள்ளதாகவும் லத்திகா சரண் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’