வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 31 டிசம்பர், 2010

பல்கலைக்கழக வன்னி மாணவரின் விபரம் திரட்டும் இராணுவத்தினர்

ன்னியை சொந்த இடமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களை இராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர். வன்னிப் பகுதி பாடசாலைகளில் கல்வி பயின்று நாட்டில் பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயிலும் மாணவர் களின் விபரங்களையே இராணுவத்தினர் திரட்டி வருகின்றனர்.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்ற ஆண்டு, சித்தியடைந்த பாடங்களையும், கல்வி பயிலும் பல்கலைக்கழகம், கற்கும் துறை போன்ற விபரங்களையும், குடும்ப உறுப்பினர் விபரம் முதலானவற்றையும் திரட்டி வருகின்றனர் என வன்னி பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பல்கலைக்கழக மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் ஒரு வித அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’