வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 டிசம்பர், 2010

இரத்தினக்கல் குழி இடிந்து 6 பேர் காயம் ; ஒருவரை காணவில்லை

கி ரிந்த, புஹுல்வெல்ல பகுதியில் இரத்தினக்கல் அகழ்வுக் குழியொன்று இன்று மாலை இடிந்ததால் அங்கு பணியாற்றிய 6 பேர் மண்ணில் புதையுண்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மற்றொருவர் காணாமல் போயுள்ளதால் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

30 அடி ஆழமான இக்குழியில் 7 இளைஞர்கள் மீதும் 5 அடி உயரத்திற்கு மண் இடிந்து வீழ்ந்தது.
4 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாரால் இவர்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேற்படி இரத்தினக்கல் அகழ்வுக் குழியின் உரிமையாளர் ஆவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’