வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

வாக்காளர் இடாப்பில் புனர்வாழ்வு பெற்றோர் இணைவு : உதவி தேர்தல் ஆணையாளர்

புனர்வாழ்வு மையங்களிலிருந்து சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியோரின் பெயர்கள் வாக்காளர் இடாப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படும் என துணைத் தேர்தல் ஆணையாளர் நிசாந்த திரிப்பிரிய ஹேரத் நேற்றுத் தெரிவித்துள்ளார்
.அவர் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
"வாக்காளர் இடாப்பில் இவர்களின் பெயர் பதிவது தொடர்பாக கிராம சேவகர்களின் ஊடாக தகவல்கள் திரட்டப்படவுள்ளன.
வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டவர்களின் விபரங்கள் மூன்று மாதங்களுக்குள் காட்சிப்படுத்தப்படும்.
2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்" என்றார்.
வெளிநாடு சென்றுள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இந்த வார இறுதியில் நாடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதமளவில் புதிய தேர்தல் ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’