வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கொள்ளை கோஸ்டி குழுவினர் பொலிஸாரால் கைது

நீண்ட நாட்களாக பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கொள்ளை கோஸ்டியொன்றை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்
.மூவர் கொண்ட இக்கொள்ளை கோஸ்டியினரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், தங்க மாலைகள், பல பவுண் தங்கநகைகள், 35 ஆயிரம் ரூபாய் பணம், கையடக்க தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி யு.எம்.அமரசிறி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் 7ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ. இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’