வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கு கடந்த மூன்று நாள்களாகப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் நோயாளிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

மூன்றாம் காலாண்டுக்கான மருந்துப் பொருள்கள் இதுவரை வந்து சேராமையே இந்த மருந்துத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா பவானியிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு நாள்களில் மருந்துப் பொருள்கள் வந்து சேர்ந்துவிடும். அதன் பின்னர் சுமூகமான நிலை தோன்றிவிடும் என்று தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’