வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 29 மே, 2010

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரியானாவைச் சேர்ந்த ராஜேந்தர் சிங், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்சங்க பாதுகாப்பு படை(சிஐஎஸ்எஸ்) பணியாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் விமான நிலைய 'பார்க்கிங்' பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, இன்று பகல் 1.00 ‌மணியளவில் அவரது கையில் இருந்த கார்பன் கன் ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்தது.
துப்பாக்கித் தரையை நோக்கி இருந்ததால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ராஜேந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கி வெடிப்பால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’