வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

பிரபாவின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இலங்கை திரும்பினார்: கே. சிவாஜிலிங்கம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந் நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் வீசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.
எனினும் பார்வதி அம்மாள் நேற்று திங்கட்கிழமை மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதற்குரிய அனுமதியை பார்வதி அம்மாளுக்கு இந்திய மத்திய அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’