வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு விசேட ரயில் சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு விசேட ரயில் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த ரயில் சேவையானது வெளிநாட்டுப் பயணிகளின் நன்மை கருதியே ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய சினிமா விருது வழங்கும் நிகழ்வினை முன்னிட்டே இந்தச் சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பணிப்பாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கென விசேட ரயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில்கள் இரண்டு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’