வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஏப்ரல், 2010

பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி பிக்கு முன்னணியினர் உண்ணாவிரதம்

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி தேசிய பிக்கு முன்னணியினர் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்துக்கு அருகில் உணவுத்தவிர்ப்பு
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை நோக்கி பேரணியாக வந்த அவர்கள், தொடரூந்து நிலையத்துக்கு அருகில் மண்டபம் ஒன்றை அமைக்க முயற்சித்தனர்.
இதன் போது கட்சியின் உறுப்பினர்களும், பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் பின்னர் சுமுகநிலை ஏற்பட்டதையடுத்து , மண்டபம் அமைக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’