
சாமியாருடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்கள் வெளியாகிவிட்டதால், அந்த அதிர்ச்சியில் தற்கொலை க்கு முயன்றார் நடிகை ரஞ்சிதா என அவருக்கு ஆதரவான சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
பிரம்மச்சாரி மற்றும் பரமஹம்ஸ என்று தன்னைக் கூறிக்கொண்ட சாமியார் நித்யானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் செக்ஸ் உறவு கொண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியாகி உலகை அதிர வைத்தன.
இரண்டு நாள் அமைதி காத்த சாமியார் தரப்பு, பின்னர் இது போலியான வீடியோ என்றது.
ஆனால் சாமியாரிடமும் விசாரித்துவிட்டே இந்த வீடியோவை ஒளிபரப்பியதாக சன் தொலைக்காட்சி நேற்று அறிவித்தது. போலி வீடியோ என்று நித்யானந்தா தரப்பு மறுத்தாலும், அதை நிரூபிக்க தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டனர்.
இந் நிலையில் பிரச்சனையின் மையப்புள்ளியான ரஞ்சிதா இருக்கும் இடம் தெரியவில்லை. அவரது வீடு பூட்டிக் கிடக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள தனது நெருங்கிய தோழியின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஞ்சிதாவை போலீசார் விசாரணை நடத்துவதற்காக தேடுகிறார்கள். ராவண் படத்துக்கு டப்பிங் பேச மணிரத்னமும் அவரது யூனிட்டாரும் கூடத் தேடுகிறார்கள்.
ரஞ்சிதாவுக்கு உதவ நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகளும் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் ரஞ்சிதாவின் கணவர் ராகேஷ் மேனன் குடும்பத்தினரும் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளனராம். ராகேஷ் மேனன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. கணவருடன் இருப்பதாகவே ரஞ்சிதாவும் கூறிவந்தார். ஆனால் தனியாகவே வசித்து வந்தார்.
தானும் சாமியாரும் உள்ள ஆபாசக் காட்சிகள் வெளியானதால் ரஞ்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிலர் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், சில தினங்களாக ரஞ்சிதா பற்றி வெளியாகும் செய்திகளின் தீவிரத்தைத் தணிப்பதற்காகவும், ரஞ்சிதாவைத் தேடும் போலீசாரின் வேகத்தை மட்டுப்படுத்தவும் இந்த 'தற்கொலை முயற்சி' செய்தியை அவருக்கு வேண்டிய சிலர் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’