வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 மார்ச், 2010

இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல்


இலங்கையின் தமிழர் உட்பட்ட சமூகங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என இந்தியா மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து புதிய ஆரம்பத்திற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை காண வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளதாக கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும். இதற்கான அழுத்தங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிருஸ்ணா தம்மிடம் தொடுக்கப்பட்ட எழுத்துமூல கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’