வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 மார்ச், 2010

மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம்-ஐ.நா _



இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்கின்றது.
இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து
நிபுணர்கள் குழுவினை நியமிப்பது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கவில்லையெனவும் இவ்விடயம் தொடர்பில், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பானகீ மூன் கலந்தாலேசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்கின்றது. இதேவேளை தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதென அணிசேரா நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’