
நித்யானந்தம் - ரஞ்சிதா சிடி கிராபிக்ஸா? என்ற கேள்விக்கு இன்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்...
சென்னையில் நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட யாராவது புகார் கொடுத்துள்ளார்களா?
தனிப்பட்ட முறையில் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் தரவில்லை. இதுவரை எங்களிடம் வந்த 2 புகார்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாமியார் நித்யானந்தா தொடர்புடைய விவகாரம் உங்கள் எல்லைக்குள் இல்லாத பட்சத்தில் அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?
நாங்கள் விசாரிக்க முடியாது என்பதால்தான் வழக்குகளை கர்நாடக போலீசாருக்கு மாற்ற உள்ளோம்.
பர்மா பஜாரில் சாமியார் நித்யானந்தா சி.டி.க்கள் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறதே?
அப்படியா?
ரஞ்சிதா- சாமியார் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது?
நான் சி.டி.யை பார்க்கவில்லை. (அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர், 'சாமியார் சி.டி. 2 1/2 மணி நேரம் ஓடுகிறது' என்றார். )
சாமியார் சி.டி. கிராபிக்ஸ் செய்யப்பட்டதா?
அது பற்றி எனக்குத் தெரியாது. நான் தொழில்நுட்ப வல்லுனர் இல்லை.
சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா?
ஆம்... ரஞ்சிதா தான்.
ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களிடம் புகார் வந்துள்ளதா? அவர் மீது விபசார வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
யாரும் புகார் தரவில்லை. நீங்கள் கேட்பது இதற்கு பொருந்தாது.
ரஞ்சிதா மிரட்டப்பட்டதாக உங்களிடம் புகார் வந்துள்ளதா?
இல்லை.
சாமியார் தொடர்பான ஆபாச காட்சிகள் டி.வி.யில் அடிக்கடி வெளியானது. இது போன்ற ஆபாச காட்சிகள் சிறுவர்- சிறுமிகள் மனதை பாதித்து கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறப்படுவதால் இனி டி.வி.யில் ஆபாச காட்சிகள் வருவதை தடுப்பீர்களா?
பத்திரிகைகளுக்கே சென்சாரா? அது சுயமாக இருந்தாலே போதும்!
நித்யானந்தன் மீது 6 வழக்குகள்... அத்தனையும் கர்நாடகத்துக்கு மாற்றம்!
பெங்களூர் ஆசிரமத்தில் ஓரினச் சேர்க்கை, கனடா நாட்டுப் பெண் கொலை... சீடர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்!
நித்தியானந்தர் ஆசிரமங்கள் சூறை!













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’