
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பில்கிளிண்டன் (63), பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி தீவின் மறு சீரமைப்பு பணிக்குழுவின் ஐ.நா.தூதராக உள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த பல நாட்களாக போதுமான ஓய்வு இல்லாமல் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கிளிண்டனுக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, கொலம்பியா வளாகத்தில் உள்ள நியூயார்க் பிரஸ்பைடேரியன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை இருதய சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்தனர். அப்போது இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு உடனடியாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’