
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன்.
இதில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான எனது நிலைப்பட்டை இவ்வாரம் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’