வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

முல்லைத்தீவு மாவட்டத்தில் த.தே.கூ சார்பில் ரவிஹரனை நிறுத்தக் கோரிக்கை


முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டியிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’