
தாம் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவர் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணையப் போவதில்லை என மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார். சிவகீதா மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவல் தொடர்பிலேயே அவர் இந்த பதிலை வெளியிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த போதும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவைப் போல ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி உறுப்பினராகவே இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’