வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஆஸி. கப்பலிலிருந்த இலங்கையரை ஏற்க நியூஸி. இணக்கம்


அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78 இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13 பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியக் கப்பலான ஓஷியானிக் வைக்கிங் கப்பல் மூலம் இந்த குடியேறிகள் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த 78 பேரில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும், குடியேற்றப்பட்டுள்ளனர்.

எஞ்சியிருந்த 13 பேருக்கே நியூசிலாந்து குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா பிரதமருக்கும் நியூஸிலாந்து பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கத்தை நியூஸிலாந்து வெளியிட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’