
இலங்கையில் 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தாம் தோல்வியுற்றதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து இயங்கும் ஜி டி.விக்குப் பேட்டியளித்தபோது இதை அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேறியதில் தமக்குப் பங்கிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் ரணில் மறுத்திருக்கிறார்.
கருணா பிரிந்தது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிரச்னை என்று குறிப்பிட்டுள்ள ரணில், அதற்காகத் தம்மீது குற்றம்சுமத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மாவில் ஆறு பிரச்னையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கான காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’