
இங்கிலாந்தில் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, இவை எங்கிருந்து உருவாகின்றன என்று இங்கிலாந்து பொலிசார் ஆய்வு நடத்தினர்.
அதன்போது, இங்கிலாந்தில் ஒரு பிரிவைச் சேர்ந்த சிறுவர் கள் மனித குண்டுகளாக மாற விரும்புவது தெரிய வந்தது. அவர்கள் 7 முதல் 10 வயதினர். இது லண்டனைப் பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
இவர்கள் ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயின்று வருபவர்கள். குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் இவர்கள் மூளைச் சலவை செய்யப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
பாடப் புத்தகங்களில், "நான் மனித குண்டாக மாற விரும்புகிறேன்..." என்று இவர்கள் எழுதி வைக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது குறித்து இவர்களின் பள்ளி ஆசிரியர்களே வருத்தப்படுகின்றனர்.
இந்தத் தகவலை 'தி டெலி கிராப்' என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து வன்முறை எண்ணம் கொண்ட 228 இளைஞர்கள் மற்றும் 'டீன்ஏஜ்' வயதினரின் மனதை சீர்படுத்தி நல்வழிக்குத் திருப்பும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’