
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை 730 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வன்முறைகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 33பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 16 தீவைப்பு சம்பவங்களுடன் 5 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகvum அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டமாக குருணாகலில் 71 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவையில் 63 வன்முறைச் சம்பவங்களும், மாத்தறையில் 56 வன்முறைச் சம்பவங்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’