வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 டிசம்பர், 2009

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5250 ரூபா ஒய்வூதியர்களுக்கு 2375 ரூபா அதிகரித்த கொடுப்பனவு


ஓய்வூதியம் பெறுவோருக்கு 2375 ரூபா அதிகரித்த கொடுப்பனவை வழங்குவதுடன் அரச ஊழியர்களுக்கு 5250 அதிகரித்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

அத்துடன் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினங்களைக் கவனத்தில் கொண்டு நாட் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 175 ரூபா வழங்கும் வகையில் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான சுற்று நிருபமொன்றையும் வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதல் வழங்கப்படவுள்ள இவ் அதிகரித்த கொடுப்பனவுகளை அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க அனைத்து திணைக்கள தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோதல்கள் இடம்பெற்று வந்த காலப் பகுதியைத்; தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களுக்காக அறிவிக்கப்பட்ட அதிகரித்த விலைகளால் கணிசமான மக்கள் தமக்கான அத்தியாவசிய நுகர்வுக்கான வாய்ப்புக்களை இழந்திருந்தமை யாவரும் அறிந்ததே.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’